search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பலி"

    • குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லி பாளையம், காஞ்சிக்கோவில் ரோடு தாய் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி நாகமணி.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 2-வது ஆண் குழந்தை ஆகாஷ் (11 மாதம்). சதீஷ்குமார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு நாகமணி டியூசனில் படிக்கும் முதல் மகனை கூப்பிட சென்று விட்டார். வீட்டில் சதீஷ்குமார் மற்றும் 11 மாத ஆண் குழந்தை ஆகாஷ் மற்றும் இருந்தனர். சதீஷ்குமார் அலுப்பில் தூங்கிவிட்டார். 11 மாத குழந்தை ஆகாஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது வீட்டில் 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வாளி இருந்துள்ளது. அந்த வாளியில் தண்ணீரும் இருந்துள்ளது. அப்போது ஆகாஷ் வாளியை பிடித்து எழுந்து நிற்க முயன்று உள்ளான்.

    அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை ஆகாஷ் வாளிக்குள் தவறி விழுந்து விட்டான். இதையாரும் கவனிக்கவில்லை. டியூசனுக்கு சென்று தனது முதல் மகனை அழைத்து வந்த நாகமணி வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது வீட்டில் குழந்தை ஆகாஷ் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் கூச்சலிட்டதை கேட்டு சதீஷ்குமார் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார். பின்னர் பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து 11 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
    • ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள எடப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் நதியா.

    இவரது சகோதரி சத்யா (வயது 23). இவர் அரியலூர் மாவட்டம் செந்துறையில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2 குழந்தைகளை தனது சகோதரி நதியா வீட்டில் விட்டிருந்தார். அதில் 2½ வயது குழந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது தையல் மிஷினுக்கு வைத்திருந்த சுவிட்ச் பாக்ஸ் பிளக்கில் திடீரென கை வைத்தான். இதில் மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நதியா குழந்தையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நதியா தனது சகோதரி சத்யாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர்.
    • சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று தம்பதி செல்போனை சார்ஜரில் போட்டுள்ளனர். அந்த சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை அணைக்காமல் விட்டுவிட்டனர்.

    இதற்கிடையே அந்த சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் திணித்து குழந்தை விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் குழந்தையை தாக்கியது. இதில் சானித்யா பரிதாபமாக உயிரிழந்தாள்.

    • இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.
    • குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் மேலே வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ.

    கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா குழந்தைக்கு உணவு ஊட்டினார். கீதா ஸ்ரீ உணவு சாப்பிட மறுத்து அடம் பிடித்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சினேகா வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து வந்து குழந்தையின் தலையில் அடித்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த கீதா ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஆத்திரத்தில் அடித்ததில் மகள் இறந்ததை நினைத்து சினேகா கதறி துடித்தார்.

    மகளை கொலை செய்தது தெரிந்தால் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவார் என எண்ணிய சினேகா மகளை வீட்டின் முன்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டார்.

    இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிணம் மேலே வந்தது.

    அங்கிருந்த நாய்கள் குழந்தை பிணத்தை இழுத்துச் சென்றன. இதனைக் கண்ட பொது மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக இருந்தது சினேகாவின் குழந்தை கீதா ஸ்ரீ என தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் சினேகாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் விசாரணையில் கீதா ஸ்ரீ சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கரண்டியில் அடித்ததாகவும் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • டாக்டர்கள் குழந்தை நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
    • ஐஸ் அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    சென்னை ஐஸ்அவுஸ் பள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் செந்தமிழன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரட்டை ஆண்குழந்தை உள்ளது. செந்தமிழன் குடும்பத்தோடு முதல் மாடியில் வசித்து வந்தார். இரட்டை குழந்தைகளில் 4 வயது குழந்தையான நித்திஷ் நேற்று இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான்.

    மாடியில் பால்கனியில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது கைப்பிடி சுவரை பிடித்து நித்திஷ் அதில் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் அவன் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தான். பலத்த காயம் அடைந்த நித்திஷை உடனடியாக தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தை நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நித்திஷ் பரிதாபமாக நள்ளிரவில் உயிரிழந்தான். இது தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மாடியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தாய் மற்றும் உறவினர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை நித்திஷின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் உறவினர்களிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்படுகிறது. உடலை பெறுவதற்காக ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கூடி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் தவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கைக்குழந்தை என்பதால் தனது பெற்றோர் வீட்டில் இமாக்குலேட்ரூபி தங்கி இருந்தார்.
    • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி இமாக்குலேட்ரூபி (35). இவர்களுக்கு ஜெனோவா என்ற 2 மாத பெண் குழந்தை இருந்தது. கைக்குழந்தை என்பதால் ரோமன் மிஷன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இமாக்குலேட்ரூபி தங்கி இருந்தார்.

    இந்த குழந்தையை நேற்று குளிக்க வைத்து அதன் உடலில் சூரிய ஒளி படும் வகையில் மொட்டை மாடியில் அவரது தாய் வைத்திருந்தார்.

    அப்போது கை தவறி குழந்தை கீழே விழுந்தது. இதனால் அலறியடித்துக்கொண்டு தனது குழந்தையை இறங்கி வந்து தூக்கிய இமாக்குலேட்ரூபி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோவில் ஊராட்சி வேல கவுண்டனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய நாதன் (வயது 32). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஹரிஷ் என்ற 3 வயது ஆண்குழந்தை, ரக் ஷிதா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.

    இவரது வீட்டிற்கு முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தண்ணீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் மின் மோட்டாரை பழுதுபார்க்க கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தண்ணீர் டேங்க் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்தார்.

    அப்போது குழந்தை ஹரிஷ் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதை கவனிக்காத திவ்யா துணி துவைத்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

    அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தொட்டியில் கிடப்பதை பார்த்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் பகுதியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஷெரிப் அலுவலக மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர்.
    • குழந்தையை காரை விட்டு சற்று தள்ளி வைத்ததாக நினைத்து காரின் அருகிலேயே வைத்திருக்கிறார்.

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் ஃபீனிக்ஸ் பகுதிக்கு வடக்கே சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள காட்டன் உட் பகுதியில், ஒரு பெண் தனது காரை நகர்த்தும்போது எதிர்பாராத விதமாக காரில் சிக்கி அவரது 13 மாத பெண் குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து யாவபாய் கவுண்டி ஷெரிப் அலுவலக அறிக்கை தெரிவித்திருப்பதாவது:

    ஜூலை 6ம் தேதி, யாவாபாய் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், தனது 13 மாத குழந்தையின் மீது காரை ஏற்றிவிட்டதாக தெரிவித்தார். ஜஃப்ரியா தார்ன்பர்க் எனும் அப்பெண்மணி தனது காரை தனது வீட்டிற்கு வெளியே காரை பார்க்கிங் செய்துள்ளார். அவரது குழந்தை, குழந்தைகளுக்கான இருக்கையில் (கேனோபி) இருந்திருக்கிறது. குழந்தையை அதன் இருக்கையோடு (கேனோபி) எடுத்து காரை விட்டு சற்று தள்ளி பாதுகாப்பான தூரத்தில் வைத்ததாக ஜஃப்ரியா நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் காரின் அருகிலேயே வைத்திருக்கிறார்.

    பின்னர் காரை சரியான இடத்தில் பார்க்கிங் செய்வதற்காக நகர்த்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அமர்ந்திருந்த "கேனோபி" காரின் முன்புற டயரில் சிக்கிக்கொண்டிருக்கிறது. உடனே காரை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தபோது குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவசர உதவிக்கான 911 எண்ணை அழைத்திருக்கிறார். ஷெரிப் அலுவலக மருத்துவப் பணியாளர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். குழந்தையை உடனடியாக வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் குழந்து இறந்துவிட்டது.

    இவ்வாறு ஷெரிப் அலுவலகம் கூறியிருக்கிறது.

    ஷெரிப் அலுவலக குற்றப்புலனாய்வுப் பணியகம் இப்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மகளின் மரணம் தொடர்பாக தாய் மீது குற்றம் சாட்டப்படுமா? என்பது தெரியவில்லை.

    • குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.
    • மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் வசித்து வருபவர் நஜீபுத்தீன். இவரது மனைவி இம்ரான்பேகம். இவர்களுக்கு 11 மாதத்தில் அப்ரின் என்று பெண் குழந்தை இருந்தது.

    இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். நஜீபுத்தீன் தேர்வாய் கண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறைய வில்லை.

    இதையடுத்து குழந்தை அப்ரினை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரவசம் பார்த்ததால் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் மனைவி சுபாஷிணி (வயது 23) தனது 2-வது பிரசவத்திற்காக சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்சும், உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுபாசிணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே அங்கிருந்த நர்சு சுபாஷிணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுபாஷிணியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.

    தற்போது சுபாஷிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குழந்தையின் தந்தை கோபிநாதன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சுபாஷிணியின் குடும்பத்தினர் குழந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பிரவசத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, மே.23-

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பெத்தசிகரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பா. இவரது மனைவி பத்மா (வயது30). இவர்களுக்கு திலாக(3) என்ற பெண்குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தை திலகா வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த மின்வயரை தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து பத்மா பேரிகை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது.
    • கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய கட்டிடத்தில் தலைமை மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. இதில் 20 படுக்கைகள் கொண்டு சிகிச்சை பிரிவு உள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த பிரிவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 24 மணிநேரமும் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இங்குள்ள கழிவறையில் இன்று காலை பிறந்து ஒரே நாளே ஆன ஆண் சிசு கொலை செய்யப்பட்டு கிடந்தது. கழிவறையை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு பணியாளர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத ஆண் சிசு உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் சிசுவை கொன்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

    மேலும் கடந்த 2 நாட்களில் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் எத்தனை பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவறான தொடர்பில் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்து கழிவறையில் வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இறந்த சிசுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×